சென்னை: இயக்குனர் வெற்றி மாறனின் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ படத்தில் அஞ்சலி, சிவராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதை அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், படம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், டீசரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் குறித்த ஆபாச காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும், இது பாலியல் குற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிடவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிமன்றம், பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.