லாடர்ஹில்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தானின் சல்மான் ஆகா 38, ஹசன் நாஸ் 40 ரன்கள் எடுத்தார். ஃபகார் ஜமான் 20 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜேசன் ஹோல்டர் 4. குடகேஷ் மோட்டி 2. அகீல் ஹொசைன். ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் 21, குடகேஷ் மோட்டி 28, ஜேசன் ஹோல்டர் 16, மற்றும் ரொமாரியோ ஷெஃபர் 15 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று லாடர்ஹில்லில் நடைபெறும்.