சென்னை: பள்ளிக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்களிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழல்-வாழ்க்கைமுறை இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரு நாள் மரக்கன்று நடும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாணவரும் பள்ளி, வீடு அல்லது உள்ளூர் சுற்றுச்சூழல் பகுதிகளில் ஒரு மரக்கன்று நட வேண்டும். மரம் நட்ட பிறகு, தாய் மற்றும் பாதுகாவலருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். அதை https://ecoclubs.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

வேடிக்கை குழுக்களின் அடிப்படையில் பள்ளி அளவில் ஒரு போட்டியை உருவாக்கி, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் பங்கேற்புக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்கள் வனத்துறையுடன் இணைந்து இதற்காக மரக்கன்றுகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.