புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போரை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே எந்த விவாதமும் இல்லை என்பது மட்டும் உறுதி.”