புதுடில்லி: மறதி நோய் ஏற்பட்டுள்ளது…எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அரசியல் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு குறித்த புகாரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்ந்து ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “ராகுலுக்கு நீண்டகால அரசியல் மறதி நோய் ஏற்பட்டுள்ளது. உண்மையை விட பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி சர்ச்சைக்குரியதாக கூறும் கேஎம்ப்ட் நிறுவனத்திற்கே காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதற்கான உதாரணமாக, பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் – நவம்பர் 2025, கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலை – செப்டம்பர் 2024., • ஆதிகவி ஸ்ரீ மகரிஷி வால்மீகி பல்கலை – மார்ச் 2024, கர்நாடகா பல்கலைக்கழகம் – ஜூன் 8, 2023, ஆகிய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டினார்.
“இந்த நிறுவனம் குற்றவாளி எனில், அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த காங்கிரஸ் அரசுகள் பதில் சொல்ல வேண்டாமா? காங்கிரஸ் முதல்வர்கள் ராஜினாமா செய்வார்களா?” என்றும் கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில், மோடி அரசுக்கு எதிராக அரசியல் நாடகம் நடத்தப்படுகிறதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.