By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டெக்சாஸில் பயங்கரம்… ராணுவ அபாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் பலி; காட்டுத்தீயால் மக்கள் வெளியேற்றம்
    1 Min Read
    உலக சந்தையில் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் தாக்கம்!
    0 Min Read
    இன்று வானில் அரிய காட்சி… சூரிய கிரகணத்துடன் பெர்சீட் விண்கற்கள்!
    0 Min Read
    நியூசிலாந்து பிரதமருக்கு நெருக்கடி… தலைமைப் பதவி வாக்கெடுப்பில் தப்பினார்!
    0 Min Read
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
    1 Min Read
    மலர்களால் குலுங்கும் அம்ரித் உத்யான்: ஆகஸ்ட் 16 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
    1 Min Read
    தஞ்சை மண்ணின் பெருமை: மணிப்பூரின் இளம் மாவட்ட கலெக்டராக ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்பு
    1 Min Read
    டிவி விளம்பரங்களுக்கு 12 நிமிட கட்டுப்பாடு ரத்து: ‘10+2’ விதிமுறையும் முடிவுக்கு வந்தது
    1 Min Read
    அயோத்தி ராமர் கோவில் நன்கொடை எண்ணிக்கையில் புதிய கட்டுப்பாடுகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரெயில் டிக்கெட்டில் மை அழிகிறதா? தெற்கு ரெயில்வே வலியுறுத்தியது எதை?
    1 Min Read
    கோவில் நிதியில் வழக்கறிஞர்களுக்கு வழங்கிய கட்டணம் எவ்வளவு? நீதிபதிகள் கேள்வி
    1 Min Read
    தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்
    1 Min Read
    தலைமைச் செயலகம் அருகே ‘மனு எழுதுபவர்கள்’ பெயரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிப்பு
    1 Min Read
    51 வயதில் மருத்துவக் கனவு நனவானது: நீட் மூலம் எம்.பி.பி.எஸ். இடம் பெற்ற நாகை சுரேஷ்குமார்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
இந்தியா

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

Nagaraj
Last updated: August 15, 2026 12:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பணி ஆணைகளை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.

தமிழக அரசு தரப்பில், இது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் வாதிடப்பட்டது. எதிர்மனுதாரர்கள் தரப்பில், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பம் பாதிக்கப்படும் என்றும், அந்த குடும்பத்துக்கு அரசு உதவி வழங்குவதைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

 

You Might Also Like

மலர்களால் குலுங்கும் அம்ரித் உத்யான்: ஆகஸ்ட் 16 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

தஞ்சை மண்ணின் பெருமை: மணிப்பூரின் இளம் மாவட்ட கலெக்டராக ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்பு

டிவி விளம்பரங்களுக்கு 12 நிமிட கட்டுப்பாடு ரத்து: ‘10+2’ விதிமுறையும் முடிவுக்கு வந்தது

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை எண்ணிக்கையில் புதிய கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: காலை 7–10, மாலை 4–7 மணி வரை தடை

TAGGED:CrowdIncidentGovernmentJobkarurSupremeCourtTamilNaduGovernmentஅரசு பணிஉச்சநீதிமன்றம்கரூர்குடும்பநலன்கூட்டநெரிசல்தமிழகஅரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?