புண்ணியங்கள் பெருக கடவுளின் பாதத்தில் மலர்களை அர்ப்பணியுங்கள்
சென்னை: பூக்கள் வழிபாட்டில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இறைவனுக்குப் பூக்களைச் சமர்ப்பிப்பதால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பூக்களின் முக்கியத்துவம்: சாஸ்திரங்களின் படி, கடவுளின் பாதத்தில் மலர்களை அர்ப்பணிப்பதன் மூலம், புண்ணியங்கள் பெருகும், பாவங்கள் அழிந்து பல நன்மைகள் உண்டாகும். பூக்களை அர்ப்பணிக்கும் முறை: சமய நம்பிக்கையின் படி கடவுளை அலங்கரிக்கும் போது தலையில் ஆரம்பித்து பாதம் வரை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.Long Distance Bus & Rail
கடவுளுக்கு மிக விருப்பமானது மலர்கள்: நாம் தங்கம், வெள்ளி, நகைகள் போன்றவற்றால் கடவுளை அலங்கரிப்பதை விட பூக்களால் அலங்கரித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி ஏராளம் என்பது சாஸ்திர நம்பிக்கை. பூக்களைக் காட்டிலும் மலர் மாலைகளை வழங்குவது இரட்டிப்பு பலன்களைத் தரும். இவ்வாறு செய்வதன் மூலம் வறுமை நீங்கி, மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
இந்து மதத்தில் விநாயகப் பெருமான் முதலில் வழிபடப்படும் தெய்வம். விநாயகருக்கு மாலை அணிவித்து நமது வேண்டுதலை முன் வைத்தால் உடனே நிறைவேற்றுவார். சிவபெருமானுக்கு பிடித்த மலர்: ஜோதிட சாஸ்திரத்தின் படி தும்பைப் பூக்கள் சிவபெருமானுக்கும் மிகவும் பிடித்தமானவை. தும்பை பூவால் மாலை கட்டி சிவபெருமானை வணங்குவதால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும்.
லட்சுமி தேவி பூஜைக்கான மலர்கள்: செம்பருத்தி, வெள்ளைத் தாமரை, மற்றும் அனைத்து சிவப்பு மலர்களும் தேவிக்கு மிகவும் பிடிக்கும். தாமரை மலர்கள் 11 நாட்களும் அல்லி மலர்கள் 5 நாட்களும் வீணாகாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.
