கோலாப்பூர்: லோக்சபாவில் கடந்த 26-ம் தேதி பேசிய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் வாசித்தார்.
இதனிடையே, கோலாப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார், “எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
இந்திரா காந்தி இப்போது உயிருடன் இல்லை. அப்படியிருக்க சபாநாயகர் இப்போது ஏன் இந்தப் பிரச்னையைக் கொண்டு வர வேண்டும்? அரசியல் அறிக்கை விடுவதுதான் சபாநாயகரின் வேலையா?
அவரது பேச்சு, அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை,” என்றார்.