புது டெல்லி: இந்திய நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானில் மூன்று விமானப்படைத்தளங்கள் சிதைந்துள்ளன.
இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி அதிர வைத்தது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை உடைத்து இந்திய விமானப்படை வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில், ராவல்பிண்டி, முரீத், ஷோர்கோட் ஆகிய விமானப்படை தளங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
இதற்கிடையில் ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திப்பூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா, கேஷோத், கிஷன்கர், குலு மணாலி, லே, லூதியானா, முண்ட்ரா, நலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட், சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள் வரும் மே 15 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.