புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியை நோக்கி பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனை ஹரியானா மாநிலம் சிர்சாவில் வழிமறித்து இந்தியா அழித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் அபாயம் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சியால்கோட் நகர் மீது பீரங்கி மூலமும், நூர்கான், ஷேர்கோட், சக்வால் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணை மூலமும் இந்தியா தாக்கியுள்ளது.
பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் பதற்றநிலை உச்சத்தில் உள்ளது. இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தும், அத்துமீறி தாக்குவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை. குறிப்பாக பூஞ்ச் பகுதியில் 3 இடங்களில் டிரோன்கள் கண்டறியப்பட்டன. இந்த முயற்சிகள் எல்லாவற்றையும் நம் ராணுவம் முறியடித்துள்ளது. அதேநேரம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் ஹை அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன.