கர்நாடகாவில் அரண்மனை போல் அமைக்கப்பட்ட வாக்கு மையம்
கர்நாடகா: வாக்காளர்களை கவர புதிய ஏற்பாடு… கர்நாடகா உள்ளிட்ட 93 தொகுதிகளில் இன்று 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அரண்மனை போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டு போட்டவர்கள் ராஜாவின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து சென்றனர். இங்கு தேர்தல் பணியில் இருப்பவர்கள் கூட ராஜாங்க உடையில் வந்திருந்தனர்.