ஆப்பிள் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது
புதுடில்லி: 5 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு… ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 1.5 லட்சம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.