கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது
சென்னை: சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது… கோடை விடுமுறை, அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.