துபாயில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை
துபாய்: துபாயில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமல் உள்ள நிலையில் இன்றும் மீண்டும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தன்னார்வளர்கள் பலரின் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் தொய்வடைந்துள்ளன.