கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு கண்டனம்
புதுடில்லி: கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வின்ட்சர் நகரில் இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பகையுணர்வு தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுஅமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, கனடா அதிகாரிகள் இந்தியாவின் கோரிக்கையைப் புரிந்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.