சர்ச்சைக்குள்ளான நாடகம் : போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
புதுச்சேரி : புதுச்சேரி மத்திய பல்கலை நிகழ்கலைத்துறை நடத்திய நாடகத்தில் ராமாயண கதாபாத்திரங்களை ஆட்சேபகரமான முறையில் சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பு போராட்டம் நடத்தியது. இதை எடுத்து நாடகத்தின் எழுத்தாளர், இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.