உணர்வுகள் புண்பட்டதை ஏற்று மன்னிப்பு கேட்கிறேன்
டெல்லி: மன்னிப்புக் கேட்கிறேன்… மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதை ஏற்கிறேன். மன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆதிபுருஷ் வசனகர்த்தா மனோஜ் முந்தாஷிர் ட்வீட் செய்துள்ளார்.
ஆதிபுருஷ் படத்தில் இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வசனம் இருந்ததாக புகார் கூறப்பட்டது. பலதரப்பில் இருந்தும் கண்டனமும், எதிர்ப்பு வந்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக வசனகர்த்தா மனோஜ் ட்வீட் செய்திருக்கிறார்.