கனமழை பெய்யும் வாய்ப்பு… மக்களே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்
இமாச்சல பிரதேசம்: கனமழை பெய்யும் வாய்ப்பு என்பதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கு சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்கு சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.