சின்னமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறப்பு
சென்னை: பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19ம் தேதி முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது.