தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை கோர்ட்
இலங்கை: மீனவர்கள் விடுவிப்பு… எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறையும், இரு மீனவர்களுக்கு ஆறு மாதச் சிறையும் விதிக்கப்பட்டது.