நாளை திரையரங்குகளில் காட்சிகள் கிடையாது
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை திரையரங்குகளில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது. “தமிழ்நாடு முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காட்சிகள் ரத்து செய்யப்படும்” என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.