திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா: கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
திருப்பத்தூர்: சிவகங்கை, திருப்பத்தூர் அருகே அரிபுரம் கிராமத்தில் உள்ள கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மீன்பிடியாளர்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இந்த கண்மாயில் பாப்புலெட், கெண்டை, கெழுத்தி, குறவை, அயிரை, சிலேபி, கட்லா உள்ளிட்ட பல வகையான நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.