பணிக்காலத்தில் இறந்த அரசு டாக்டர்களின் வாரிசுகளுக்கு பணி
சென்னை: பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால் வாரிசுகளுக்கு அனைத்துத் துறையிலும் கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில் மருத்துவத்துறையிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.