சென்னை: சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்திற்குள் மகளிர் அமைப்பின் ஆதரவாளர்களுடன் புகுந்த புர்கா அணிந்த பெண், “நீதி வேண்டும்” என்ற பதாகையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்திற்குள் மகளிர் அமைப்பின் ஆதரவாளர்களுடன் புகுந்த புர்கா அணிந்த பெண், “நீதி வேண்டும்” என்ற பதாதையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். ஈரோடு மாவட்டம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே இடத்தில் பணிக்கு வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரை காதலித்து , அவர் பேச்சை கேட்டு மதம் மாறிய நிலையில், இப்ராஹிம் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் அறிந்து அதனை தடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்
முதலில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுவரை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத்தால், திருமணத்தை நிறுத்த மண்டபத்துக்கு நேரடியாக வந்தாதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
அங்கிருந்து செல்லும்படி அந்த பெண்ணை, ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி எச்சரித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்து வெளியே அழைத்து சென்ற போது காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, கோஷமிட்ட சமூக ஆர்வலர் கலீல் அகமது என்பவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அந்த பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலரான வளர்மதி என்பவரை ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி ஒருமையில் திட்டியதால், பதிலுக்கு “சீறுடையை கழட்டி விடுவேன்” என்று காவல் ஆய்வாளரிடம் சவால் விடுத்தார் வளர்மதி. இவ்வளவு களேபாரத்துக்கும் இடையில் அந்த பெண்ணின் புகாரில் கைதாகாமல் தப்பிக்க, முன் ஜாமின் பெற்றுக் கொண்ட இப்ராஹிம், மற்றொரு இடத்தில் வைத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வெளியே நின்றபடி சமூக ஆர்வலர்கள் “போலீஸ் அராஜகம் ஒழிக” என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ விஜய் தாமு இளம் பெண்ணிற்கு ஆதரவாக காவல் நிலையம் வந்தார். காவல் ஆய்வாளரை பார்த்து, உங்களுக்கு பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.
பணம் வாங்கிக்கொண்டு ஒருதலை பட்சமாக நீங்கள் செயல்படுகிறீர்கள் ? என நேரடியாக ஆய்வாளரை பார்த்து எம்எல்ஏ கூறியதால் காவல் ஆய்வாளர் வாக்குவதம் செய்தார்.
சமூக ஆர்வலர் வளர்மதி, உன் சட்டையை கழட்டுகிறேன் என தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியோடு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.