தஞ்சாவூா்: நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 வயது விவசாயிக்கு ஏற்பட்டு இருந்த ரத்த குழாய் அடைப்புகளை சரி செய்து சாதனை படைத்துள்ளது தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 57 விவசாயி ஒருவர் நீண்ட ஆண்டுகளாக கட்டுப்பாடற்ற உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் தீர்வு கிடைக்காமல் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அந்த விவசாயி வந்தார். ஆரம்ப பரிசோதனையில் அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் அது தமக்கு எப்போதும் இருப்பதால் சாதாரணம் என அவர் கருதினார்.

விவசாயியை பரிசோதித்த டாக்டர் நிஷாந்த் மேலும் விரிவான உடற்பரிசோதனைகளை மேற்கொண்ட போது சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது என சந்தேகிக்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்த ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
இதையடுத்து அந்த விவசாயின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் இருதயநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிஷாந்த் திறமை வாய்ந்த மருத்துவக்குழுவினர் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கேத் லேப் வசதிகளுடன் குறுகிய நேரத்தில் சிறுநீரக ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார். மேலும், தேவையான இடங்களில் இதய ரத்தக் குழாய்களிலும் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர், விவசாயியின் ரத்த அழுத்தம் குறைந்து, உடல்நிலை மேம்பட்டு, அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இயல்பான வாழ்க்கையை நடத்தி வருகிறார். விவசாயிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் நிஷாந்த் விளக்கி கூறினார்.
இதில் மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், இருதய சிகிச்சை மூத்த மருத்துவரும் எலக்ட்ரோபிசியோலஜி சிறப்பு நிபுணருமான டாக்டர் அன்பரசன், இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது
தன்னை குணப்படுத்திய மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பணியாளர்களுக்கு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
தனது உடல்நலம் தேறியதற்கு தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் அளித்த உயர்தர சிறப்பான சிகிச்சைகளே காரணம். இன்று இயல்பான நிலைக்கு தான் திரும்பி தனது பணிகளை பார்க்க காமாட்சி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.