April 28, 2024

கர்நாடகாவில் முழு அடைப்பு … பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் செப்டம்பர் 29ம் தேதி (இன்று) 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கர்நாடக மாநில எல்லையான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக உள்ளூர் நிலவரப்படி கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் உயர் அதிகாரிகள் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்ட அலுவலகம், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் பிற சந்தேகங்களுக்குத் தீர்வு காண பொதுமக்களின் தொடர்பு அலுவலகமாக செயல்படும். பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை 9498170430, 9498215407 என்ற இந்த தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!