இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது முடிவை பிசிசிஐயிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளாராம். இந்த தகவல் வெளியாகியதுடன், இந்திய கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. விராட் கோலியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
36 வயதான விராட், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்குப் பிறகு அவரும் ஓய்வு பெற முடிவெடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. விராட், சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், மற்ற தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு முடிவை எடுத்துள்ளார். பிசிசிஐ கோரிக்கைக்கு இணங்க அவர் தனது முடிவை மாற்றுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. கடந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையுடன் ரோகித் மற்றும் கோலி அந்த ஃபார்மாட்டில் இருந்து விலகினர்.தற்போது 2025 ஐபிஎல் இடைநிறுத்தம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கடைசியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய போட்டிகளில் குறைந்த அளவிலேயே ரன்கள் எடுத்தார். இது அவருக்கு எதிரான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
எனினும், விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் கோலி அதிரடியாக ஓய்வு முடிவை எடுத்துள்ளார். அவருடைய இந்த முடிவால் பிசிசிஐ நிலைமை சிக்கலாகியுள்ளது.ரோகித்தைத் தொடர்ந்து விராட் கோலியின் ஓய்வு, இந்திய டெஸ்ட் அணிக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், அனுபவமிக்க வீரரின் விலகல் சவாலாகவே அமையும்.விராட் கோலியின் முடிவால் பிசிசிஐ தடைப்பட்ட நிலையில், அவரைப் பழைய நிலைக்குத் திருப்பி அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர் தனது முடிவை மாற்றுவாரா என்பதை காலமே சொல்ல வேண்டும்.