அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியில் இரு தரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை எகிப்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 9-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து காசாவில் போர் நிறுத்தம் 10-ம் தேதி அமலுக்கு வந்தது.
அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும். இந்த சூழலில், போர் நிறுத்தத்தை கண்காணிக்க அமெரிக்கா, எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் காசாவில் முகாமிட்டுள்ளனர்.

அதன்படி, அமெரிக்காவின் சார்பாக 200 வீரர்கள் காசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்க வீரர்களின் முதல் குழு நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்தது. அங்கிருந்து அவர்கள் காசா பகுதிக்குச் சென்றனர்.
இந்த வார இறுதிக்குள் 200 அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தத்தை முழுமையாகக் கண்காணிக்க அவர்கள் காசாவில் முகாமிடுவார்கள்.