புதுடில்லி: காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, நவம்பர் 1 முதல் டில்லிக்குள் காற்றை மாசுபடுத்தும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு கட்டுப்பாட்டுக்காக டீசலில் இயங்கும் 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கும், பெட்ரோலில் இயங்கும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை தடை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இப்போது, மாசு ஏற்படுத்தும் வணிக வாகனங்களுக்கு நுழைவு தடை அறிவித்துள்ளது காற்று தர மேலாண்மை ஆணையம். இதற்கான ஒப்புதல் ஆணையத்தின் 25வது கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.