சென்னை : மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை நேற்றே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் சேர்த்து ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்து மகளிருக்கு ஹேப்பி நியூஸ் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை எடுக்க ஏடிஎம்களில் நீண்ட கியூவில் பெண்கள் நின்றிருந்தனர்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 நேற்றே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ள அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த மகளிர் உரிமைத் தொகை பணத்தை எடுக்க ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் பெண்கள் ஏடிஎம்எளில் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.