தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்
சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் துணை ராணுவ படையினர், ஊர் காவல் படையினரும் உள்ளனர்.