புனேவில், குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற அரிய நரம்பியல் நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளுக்கு வெளியே உள்ள நரம்புகளை தாக்குகிறது. இதன் காரணமாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 14 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர்.
இந்த நோயின் அறிகுறிகளாக முதுகு அல்லது கால்களில் ஆழமான தசை வலி, பக்கவாதம், சுவாச பிரச்னை, பேசுவதில் சிரமம் மற்றும் பார்வை பிரச்னைகள் அடங்கும். இந்த நோய் கடந்த சில நாட்களில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில் 44 பேர் புனே கிராமப்புறத்திலிருந்து, 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலிருந்து, மற்றும் 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலிருந்து உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட் நகரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்துள்ளார்கள்.
இந்த நோய்க்கு தடுப்பூசி கிடையாது, மேலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் இது பரவுகிறது. அறிகுறிகள் தென்பட்ட உடனே நரம்பியல் மருத்துவரை அணுகினால் குணம் அடைய முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.