‘வார் 2’ படத்தை முடித்த ஜூனியர் என்டிஆர் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். பிரசாந்த் நீல் இயக்கவுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
பிரசாந்த் நீல் இயக்கிய ‘சலார்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு ‘சலார் 2’ படத்தை இயக்கவிருந்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் படம் இயக்கவுள்ளார். ஜூனியர் என்டிஆரின் 31-வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.