By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்க டிரம்ப்-புதின் சந்திப்பு..!!
    2 Min Read
    பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை..!!
    2 Min Read
    இந்தியா வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பாதிப்பு: டிரம்ப் நண்பர்
    1 Min Read
    சீனாவுடன் வணிகம்.. இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்ய உத்தரவு
    1 Min Read
    இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. ஜனநாயக எம்.பி. எதிர்ப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதிய இந்தியாவின் வலிமை உலகிற்கு வெளிப்பட்டது – பெங்களூருவில் பிரதமர் மோடி உரை
    1 Min Read
    3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கி வைத்த பிரதமர் மோடி
    1 Min Read
    அரசு வழங்கிய ரூ.5000… புறக்கணித்த உத்தரகாண்ட் மக்கள்
    1 Min Read
    குடும்ப சொத்து வழக்கில் இடைக்காலத் தடை: சைஃப் அலி கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    1 Min Read
    பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில்கள்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!
    1 Min Read
    சென்னையில் நாளை முதல் இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டாம்.. போக்குவரத்து மாற்றம்..!!
    1 Min Read
    இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!
    1 Min Read
    தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை..!!
    1 Min Read
    கரடி நடமாட்டம் காரணமாக புளியஞ்சோலை சுற்றுலா தளம் மூடல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு: விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு: விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
தமிழகம்

பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு: விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

Periyasamy
Last updated: February 28, 2025 12:11 pm
By Periyasamy 3 Min Read
Share
SHARE

சென்னை: நாடு முழுவதும் உள்ள விமான நிலைய உணவகங்களில் உணவு விலை பல மடங்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்களை திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தா விமான நிலையத்தில் ‘உதன் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் இரண்டாவது ‘உடான் யாத்ரி கஃபே’ பட்ஜெட் உணவகத்தை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டிலேயே 4-வது பெரிய விமான நிலையம் சென்னை. இங்கு மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக இங்கு மற்றொரு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே முடிவடைந்து 2023-ல் முதல் கட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அதன் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது.

மத்திய அரசைப் பொறுத்த வரையில், மாநிலத்தில் பல விமான நிலையங்களை அமைக்க விரும்புகிறது. இருப்பினும் விமான நிலையங்கள் அமைப்பதற்கு ஏற்ற நிலங்களை தேர்வு செய்வது மாநில அரசின் கடமை. மாநில அரசு தேர்வு செய்யும் இடத்தை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து, சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி, விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்குகிறது. அதேபோல், சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைக்க மாநில அரசு பரந்தூரை தேர்வு செய்துள்ளது. தற்போது, ​​அதற்கான நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாநில அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்.

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. விமான டிக்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விமான கட்டணம் தானாகவே குறையும். எனவே, உடான் திட்டத்தில் பல புதிய விமான நிலையங்களை உருவாக்குவது, அதிக விமான சேவைகளை தொடங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோம். விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக வெளிநாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருந்து சென்னை விமான நிலையம் தொடர்ந்து விலக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் சரியானது அல்ல. வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் அதிக தேவை உள்ளது. அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். தமிழகத்தில் உடான் விமான சேவை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம், வேலூர் மற்றும் நெய்வேலிக்கு விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் ஏற்கனவே விமான சேவை உள்ளது. சென்னையில் இருந்து வேலூருக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சென்னை – வேலூர் இடையே விமான சேவை தொடங்கப்பட்டு, வேலூர் விமான நிலையமும் செயல்பாட்டுக்கு வரும். நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!

சென்னையில் நாளை முதல் இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டாம்.. போக்குவரத்து மாற்றம்..!!

இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை..!!

கரடி நடமாட்டம் காரணமாக புளியஞ்சோலை சுற்றுலா தளம் மூடல்

TAGGED:AviationGovernmentParanthurதமிழக அரசுநடவடிக்கைபோக்குவரத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

புதிய இந்தியாவின் வலிமை உலகிற்கு வெளிப்பட்டது – பெங்களூருவில் பிரதமர் மோடி உரை

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?