சென்னை: திமுக மருத்துவர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான நா. எழிலன் தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடக்கிறது.
இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஸ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே. பிரேம சந்திரன், ஆந்திராவை சேர்ந்த மிதுன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி. ராமராவ், வினோத்குமார் எம்.பி., பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகாவில் இருந்து துணை முதல்வர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 80-லிருந்து 143 ஆகவும், பீகாரில் 40-லிருந்து 79 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 29-லிருந்து 52 ஆகவும் அதிகரிக்கலாம். இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இடங்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும். பிரதிநிதித்துவம் இருந்தால்தான் பாராளுமன்றத்தில் உரிமைக்காக குரல் எழுப்ப முடியும். இதை உணர்ந்துதான் முதல்வர் மேடை அமைக்கிறார்; அவர் நீதி கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.