சென்னை: நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 10
இட்லி மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, சீரகம், கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.