மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (செயற்கை பன்னீர்) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள், இந்த செயற்கை பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீராகப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.
