கர்நாடகா: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலையில் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல என்றும், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
