சென்னை: முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதனால் தவெக ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படும் தவெக அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.