பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு
புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படியும், அமைதியை நிலைநாட்டவும் விவசாயிகளுக்கு மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.