வெங்காயம், தக்காளி வரிசையில் விலை உச்சத்தில் பூண்டு
சென்னை: வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து மக்களை ஒரு ஆட்டு ஆட்டியது. அந்த வகையில் தற்போது பூண்டின் விலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
ரூ.5, 10 என்று விலை ஏறாமல் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்க்ஷக விற்பனை ஆகிறது. போதிய விளைச்சல் இல்லாததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால் ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.