தபால் ஓட்டு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த ஆசிரியர்கள்
திருப்பதூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் பள்ளியில், ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்கு செலுத்தும் பெட்டியில் முறையாக சீல் ஏதும் வைக்காமல், குளறுபடி செய்ததாக கூறி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.