சென்னை: உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது ஆபத்தான விஷயமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. அதனாலேயே, பலரும் உப்புக்கு மாற்று மற்றும் உப்பை குறைத்தல் என மாற்றங்களை செய்து வருகின்றனர். ஆனால், உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது உண்மையிலேயே பலன் தருமா, அது அவசியம் தானா என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது.
மூச்சுத்திணறல், உடல் வீக்கம், கட்டுப்படுத்த முடியாத இரத்த அழுத்தம் அல்லது அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உள்ளவர்களுக்கு, இது உயிர்வாழ்வுக்கான நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, மற்ற அனைவரும் உப்பை சேர்த்துக் கொள்ள பயப்படுவதை நிறுத்த வேண்டும் என்று இதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. அதனாலேயே, பலரும் உப்புக்கு மாற்று மற்றும் உப்பை குறைத்தல் என மாற்றங்களை செய்து வருகின்றனர். ஆனால், உப்பை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது உண்மையிலேயே பலன் தருமா, அது அவசியம் தானா என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழுகிறது.
ஒரு காலத்தில் உணவின் அவசியமான சுவையூட்டியாக இருந்த உப்பு, இன்று பலரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் வீக்கம் என பல்வேறு பிரச்சனைகளுக்கும் உப்பே முக்கிய காரணமாக இருக்கிறது என்கிற பொதுவான நம்பிக்கையும் நிலவுகிறது. ஆனால், டாக்டர் யாரனோவின், உண்மை இதைவிடவும் மிகவும் நுணுக்கமானது என்று தெரிவித்துள்ளனர்.
உப்பு மனித உடலுக்கு ஒன்றும் எதிரி அல்ல, அதைப் பற்றிய மிகவும் எளிய மற்றும் பொதுவான ஆலோசனைகள் தான் உண்மையான குழப்பத்திற்கு காரணம். சோடியம் என்பது உடலுக்குத் தேவையான மற்றும் தவிர்க்க முடியாத ஒரு தாதுப்பொருளாகும்.
நரம்பு சமிக்ஞைகளை பரிமாறுதல், தசை சுருக்கம், உடலின் திரவ சமநிலை, இரத்த அழுத்தக் கட்டுப்பாடு போன்ற முக்கிய செயல்பாடுகளில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு, உப்பு ஒரு தீங்கான பொருளாக இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடுகளை விதிப்பதில் தான் உண்மையான சிக்கல் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளனர்.