டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கூடிய பொது செயலாளர்கள் கூட்டம்
புது தில்லி,
தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
16 மற்றும் 17ம் தேதிகளில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய செயற்குழு கூட்டத்துக்கான தீர்மானம், கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த சில மாதங்களில் மத்திய அரசின் பொருளாதார பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் 9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.