டெஹ்ரான்: ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ ரூ.28 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றிய அதிகாரப் போட்டியும் தொடர்ந்து வருகிறது.
ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ராணுவ வீரரை பெண் ஒருவர் பிடித்துக் கொடுத்தால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
