மாஸ்கோ: அணு ஆயுத பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் ரோமில் நடைபெறும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார்.

அவர் கிரெம்ளினில் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இதுகுறித்து, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘அணுசக்தி விவகாரம் தொடர்பாக, எங்களின் நண்பர்களான சீனா மற்றும் ரஷ்யாவுடன் எப்போதும் நெருக்கமாக ஆலோசனை நடத்தி வருகிறோம். ரஷ்ய அதிகாரிகளுடன் இதைச் செய்ய இப்போது ஒரு நல்ல வாய்ப்பு.