சென்னை: உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க கோரி பொதுத்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக சி.வி.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க கோரி பொதுத்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் மனு மீதான இந்த விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பிறகு, தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் என கூறி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.