கேரளா: கேரளா சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளம் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் மோகன்லால். கேரளம் சட்டமன்ற தேர்தலில் நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி ஜனநாயக கடமையாற்றினார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்.
இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. முதற்கட்டமாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகிய மூன்றிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கை பதிவு செய்தார்.