புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல் அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், மேலும் 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியர்களின் குடும்பத்தினர் தகவல் பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய கட்டுப்பாட்டு அறை:
+91 11 2308 8718
+91 11 2308 8719
+91 11 2301 2113
வாட்ஸ்அப்: +91 9968291988
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள:
+977 985 131 6807
+977 970 910 7500
+977 981 032 6117
இந்த எண்களிலும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
