நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து எல்லை நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட இந்த வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களையும் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்புப்பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேபாள பிரதமர் பாலன் ஷா தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே நேபாள அரசுடன் இணைந்து இந்திய விமானப்படையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
